கருணாநிதியின் மறைவு என்பது சகாப்தத்தின் முடிவு - ப.சிதம்பரம் வேதனை

கருணாநிதியின் மறைவு என்பது சகாப்தத்தின் முடிவு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வேதனை தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதியின் மறைவு என்பது சகாப்தத்தின் முடிவு என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வேதனை தெரிவித்தார்.

P.Chidambaram tweet about Karunanidhis demise

கருணாநிதியின் மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், கலைஞரின் மறைவு என்பது ஒரு சகாப்தத்தின் முடிவு. இந்தியாவுக்கும் தமிழ் இன மக்களுக்கும் ஒரு பேரிழப்பு. கலைஞர் இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர், 50 ஆண்டுகளாக ஒரு கட்சியின் தலைவர், 5 முறை முதலமைச்சர் --இவை வரலாற்றுச் சாதனைகள்.

அவற்றையும் விஞ்சும் சாதனை உண்டு. அது தான் கலைஞரின் பன்முகம். அரசியல், எழுத்து, கவிதை, ஊடகம், கலை, இயல், இசை, நாடகம், சினிமா, தத்துவம், தமிழ் இலக்கியம், இலக்கணம் என்று பல துறைகளில் முத்திரை பதித்த ஒரு மனிதர் அவர் ஒருவரே என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+