Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

67 பேருடன் பைனான்ஸ் அதிபர் உல்லாசம்.. விற்பனையில் சிடி.. தவிப்பில் பெண்கள்!

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், கடன் வாங்க வந்த பெண்களை வசியப்படுத்தி அவர்களுடன் உல்லாசமாக இருந்து சிக்கிய தொழிலதிபரின் செல்போனில் இருந்த, அவர் பெண்களுடன் உறவு கொள்ளும் காட்சிகள் அடங்கிய சிடி பாலக்கோடு பகுதியில் படு வேகமாக விற்று வருவதால், அந்த காட்சிகளில் இடம் பெற்றுள்ள பெண்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். பொதுமக்களும் இந்த சிடி விற்பனையை தடுக்க வேண்டும் என்று போலீஸாருக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாலக்கோடு அருகேயுள்ள மந்தவெளியை சேர்ந்தவர் சிவராஜ். பாலக்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வருகிறார். இவரிடம் பெரும்பாலும் பெண்கள்தான் கடன் வாங்கியுள்ளனர்.

இப்படிக் கடன் வாங்கிய பெண்கள் அதைக் கட்ட முடியாமல் போகும்போது, தனது அலுவலகத்தில் வேலைக்கு வைத்திருந்த ஒரு பெண் ஊழியர் மூலம் அந்தப் பெண்களிடம் தன்னுடைய ஆசைக்கு உடன்பட்டால் வட்டியைத் தள்ளுபபடி செய்வதாக ஆசை காட்டி வலையில் வீழ்த்தி உறவு கொண்டுள்ளார் சிவராஜ்.

இப்படிப்பட்ட செயல்களுக்காகவே அவர் தனியாக ஒரு பண்ணை வீட்டையும் வைத்திருந்தார். அந்த வீட்டில் தான் உறவு கொள்ளும்போது அந்தக் காட்சியை ரகசியமாக தனது செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டுள்ளார்.

இவரது இந்த செயல்களுக்கு சிவராஜின் நிறுவனத்தில் பணியாற்றிய பெண்தான் பாலம் போல செயல்பட்டு வந்துள்ளார். இப்படியே 67 பெண்கள் வரை அவர் உறவு வைத்திருந்தார். பலரிடம் பலமுறை கூட உறவு வைத்துக் கொள்வாராம் சிவராஜ்.

இந்த நிலையில் சமீபத்தில் சிவராஜின் செல்போன் பழுதாகவே அவர் அதைப் பழுது பார்க்கக் கொடுத்துள்ளார். செல்போன் கடைக்காரர், அந்த போனின் மெமரி கார்டைப் பரிசோதித்தபோது அதில் சிவராஜின் லீலைகள் அடங்கிய வீடியோ காட்சிகள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். உடனே அதை அப்படியே டவுன்லோடு செய்து கொண்டு தனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைத்தார். இது காட்டுத் தீயாக பரவி போலீஸ் பார்வைக்கும் போனது.

உடனடியாக விசாரணையில் குதித்த போலீஸார் சிவராஜைக் கைது செய்தனர். அவரது செல்போனில் 27 பெண்களுடன் அவர் இருந்த காட்சிகள் இருந்தது. மொத்தம் 67 பெண்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

தற்போது இந்த ஆபாச வீடியோ காட்சிகள் இடம் பெற்ற சிடிக்கள் பாலக்கோடு, தர்மபுரி ஆகிய பகுதிகளில் விற்பனையாகி வருகிறதாம். இது வேகமாகப் பரவி வருவதால் இந்தக் காட்சிகளில் இடம் பெற்றுள்ள குடும்பப் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடும்பத்தில் குழப்பம் வருமோ என்று பீதிக்குள்ளாகியுள்ளனர்.

பொதுமக்களும் இந்த சிடிக்கள் விற்பனையை போலீஸார் கண்டுபிடித்துத் தடுக்க வேண்டும், இதை விற்பவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+