மதுரை பழங்காநத்தத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு: 479 மாடுபிடிவீரர்கள் பங்கேற்பு
பழங்காநத்தத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
மதுரை : மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றுவருகிறது. இந்த விழாவை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் சார்பாக ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை காரணமாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டத்தை அடுத்து, இந்த ஆண்டு பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று நடக்கும் ஜல்லிக்கட்டை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த ஜல்லிக்கட்டில் 600 காளைகளும், 479 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். இதில் வெற்றி பெறுவோருக்கு ஏகப்பட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications