For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியை முதலமைச்சர் ஆக்கினால் மட்டுமே அமைதியாக இருப்பார்.. பண்ருட்டி ராமச்சந்திரன்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை முதலமைச்சராக்கினால் மட்டுமே அமைதியாக இருப்பார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதா குணம் அடைந்து வருகிறார். நல்ல உடல் நலத்தோடு இருக்கிறார். விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார்.

Panruti Ramachandran Condemned to Karunanidhi's speech

மருத்துவர் குழுவினர் அவரது உடல் நிலையை கண்காணித்து வருகிறார்கள். முதல்வரை பற்றி வதந்திகள் பரப்பப்படுகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். இந்த தருணத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணம் அடைய பிரார்த்திப்போம்.

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கர்நாடக அரசும், மத்திய அரசும் நிறைவேற்றாதது வேதனை அளிக்கிறது. பொறுப்புக்களை மாற்றி கொடுத்ததற்கு முதலமைச்சர் கையெழுத்து போட்டாரா? என்று கருணாநிதி பேசியிருக்கிறார். அவர் என்ன வேண்டுமானாலும் சொல்வார். அவரை முதலமைச்சர் ஆக்கினால் மட்டுமே சும்மா இருப்பார். கருணாநிதியின் கேள்விகளை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

English summary
ADMK's Panruti Ramachandran Condemned to DMK Leader Karunanidhi's speech
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X