அரியலூர் அனிதாவின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ 1 கோடி வழங்க வேண்டும்.. வேல்முருகன் வலியுறுத்தல்
மாணவி அரியலூர் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 1 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video

சென்னை: மாணவி அரியலூர் அனிதா இன்று தற்கொலை செய்துகொண்டார். அவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 1 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேட்டியளித்த வேல்முருகன், " மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவியின் மருத்துவ கனவு தகர்க்கப்பட்டுள்ளது.

எனவே இது போன்ற நிலையில், அனிதாவின் குடும்பத்துக்கு இழப்பீடாக அரசு ரூ1 கோடி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், உச்சநீதிமன்றம் கைவிட்டதால் அனிதா தற்கொலை. 37 அஇஅதிமுக எம்பிக்களும் ராஜினாமா செய்வோம் என மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தாவது 'நீட்' தேர்வுக்கு விளக்கு பெறவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமம் அனிதாவின் சொந்த ஊர். அனிதாவின் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார்.
ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். அதில் கட்-ஆஃப் மதிப்பெண் 200க்கு 196.7. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications