வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவம் குவிப்பு
வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலவரம் ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்- வீடியோ
சென்னை: ஆர்.கே நகர் தேர்தலின் வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது. வாக்கு எண்ணும் அலுவலர்கள் தாக்கப்பட்டதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே நகர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடக்கும் சமயத்தில் அங்கு சில முகவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இது சண்டையாக மாறியிருக்கிறது.

இதனால் அங்கு இருந்த வாக்கு எண்ணும் அலுவலர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதையடுத்து தற்போது அங்கு துணை ராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக போலீசாருடன் சேர்ந்து வாக்கு எண்ணும் அறையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில நேரத்தில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்க வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications