பெற்றோர் இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மேட்டூர் மாணவி
மேட்டூர் அருகே சாலை விபத்தில் பெற்றோரை பறிகொடுத்த சோகத்திலும் மனம் தளராமல் மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வு எழுதிய சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் : தமிழகத்தில் இன்று பிளஸ் 2 ஆங்கிலம் முதல்தான் தேர்வு நடைபெற்றது. இதில் மேட்டூர் அருகே சாலை விபத்தில் பெற்றோர்களை பறிகொடுத்த மாணவி ஒருவர் சோகத்துடன் கண்ணீர் மல்க தேர்வு எழுதினார். பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவே தேர்வு எழுதியதாக கூறியுள்ளார்.
முருகேசன் தம்பதியின் மகள் அமிர்தவர்சினி, ப்ளஸ் டூ படித்து வருகிறார். இவர் பொறியியல் படிக்க வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. நேற்று மாலை தனது மனைவி சுமதியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் முருகேசன். அப்போது கார் ஒன்று முருகேசன் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுமதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார்.

பெற்றோரை பறிகொடுத்த நிலையிலும் மாணவி அமிர்தவர்சினி கண்ணீர் மல்க தேர்வு அறைக்கு வந்து தேர்வு எழுதினார். சக மாணவிகள் அவருக்கு ஆறுதல் கூறினர். பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவே தேர்வு எழுதியதாக மாணவி கூறியுள்ளார்.
தாய் இறந்த சோகம்
இதேபோல தாய் இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வுகளை எழுதி வருகிறார் மாணவி மோனிஷா. சேலம் அய்யந்திருமாளிகை ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்தவர் வெங்கடேசன் மனைவி சுதா, 43. பெண்கள் கிளை சிறையில் வார்டனாக பணிபுரிந்த அவர் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது மகள் மோனிஷா சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். வியாழக்கிழமையன்று தமிழ் முதல் தாள் தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய நிலையில் மருத்துவமனையில் இருந்த தாய் சுதா உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் வியாழக்கிழமை மாலை நடப்பதாக இருந்தது. ஆனால் அம்மா ஆசைப்படி பிளஸ் 2 தேர்வெழுதி அதிக மதிப்பெண் பெற்றாக வேண்டும் என மாணவி மோனிஷா பிடிவாதமாக இருந்தார்.
வெள்ளிக்கிழமையன்று தமிழ் இரண்டாம் தாள் தேர்வெழுத மையத்துக்கு வந்தார். தாய் இறந்த மறுநாள் மாணவி தேர்வு எழுதிய சம்பவம் சக மாணவியர் இடையே உருக்கத்தை ஏற்படுத்தியது. தேர்வு முடிந்த பின்னர் இறுதிச்சடங்கில் மோனிஷா பங்கேற்றார். இன்று ஆங்கிலம் முதல்தாள் தேர்வு எழுதியுள்ளார் மாணவி மோனிஷா. பெற்றோர்களின் மரணத்திற்குப் பின்னரும் மாணவிகள் மனம் தளராமல் தேர்வு எழுதி பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications