ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்ற கட்சி நிர்வாகிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர்
சென்னை: அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை இன்று புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆசி பெற்றனர். அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். இதேபோல புதிதாக பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
கடந்த 23ம் தேதியன்று புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. அந்த புதிய நிர்வாகிகள் அனைவரும் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன், அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன், அமைச்சர்களும், தலைமைக் கழக நிர்வாகிகளுமான ஓ. பன்னீர்செல்வம், நத்தம் இரா. விசுவநாதன், ஆர். வைத்திலிங்கம், எடப்பாடி கே. பழனிசாமி, பி. பழனியப்பன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன் உசேன், அமைப்புச் செயலாளர்கள் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன்,
துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை, அமைப்புச் செயலாளர் செ. செம்மலை, விவசாயப் பிரிவுத் தலைவர் துரை கோவிந்தராஜன், இலக்கிய அணிச் செயலாளர் அமைச்சர் பா. வளர்மதி, அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் தாடி ம. ராசு, அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ், சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் ஏ. அன்வர்ராஜா, எம்.பி., ஜெயலலிதா பேரவைச் செயலாளர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமைப்புச் செயலாளர்கள் அமைச்சர் எஸ். கோகுல இந்திரா, ஏ.கே. செல்வராஜ், எம்.பி., மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் பி. வேணுகோபால், வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் வி.எஸ். சேதுராமன், வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஏ. நவநீதகிருஷ்ணன், எம்.பி., அமைப்புச் செயலாளர் எஸ். ராஜூ, மீனவர் பிரிவுச் செயலாளர் கே.கே. கலைமணி, தேர்தல் பிரிவுச் செயலாளர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன்,
அமைப்புச் செயலாளர் ஏ. பாப்பாசுந்தரம், எம்.எல்.ஏ., மீனவர் பிரிவு இணைச் செயலாளர் எஸ். ஜெனிபர் சந்திரன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர். கமலகண்ணன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், மகளிர் அணிச் செயலாளர் எல். சசிகலா புஷ்பா, எம்.பி., இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் ப. குமார், எம்.பி., மாணவர் அணிச் செயலாளர் எஸ்.ஆர். விஜயகுமார், எம்.பி., தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் அஸ்பயர் கே. சுவாமிநாதன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் வி. அலெக்சாண்டர், விவசாயப் பிரிவுச் செயலாளர் பி.கே. வைரமுத்து, எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர்கள் டாக்டர் கே. கோபால், எம்.பி., எஸ். வளர்மதி, எம்.எல்.ஏ. ஜெ. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, எம்.பி. ஆகிய தலைமைக் கழக நிர்வாகிகள் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றனர்.
ஐ.ஏ.எஸ் நிர்வாகிகள் வாழ்த்து
முதல்வர் ஜெயலலிதாவை புதிதாக பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் கொ.சத்யகோபால், வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அதுல்ய மிஸ்ரா அவர்களும் முதலமைச்சரை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். இவர்களைத் தொடர்ந்து, உள்நாட்டு பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு திரும்பிய, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் அவர்களும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.