ராகுலின் பேச்சை பார்த்து மக்கள் பாஜகவுக்கு தான் வாக்களிப்பார்கள்: இல. கணேசன்

Subscribe to Oneindia Tamil

People'll vote for BJP after listening to Rahul's speeches: Ila. Ganesan
சென்னை: பாஜக வெற்றி பெற நாங்களோ, மோடியோ பிரச்சாரம் செய்ய வேண்டியதில்லை. ராகுலின் பேச்சை பார்த்து மக்களே பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

பாட்னா குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பபாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் பேசுகையில்,

புத்தர் ஞானம் பெற்ற பூமியில், அஹிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் பெயரில் இருக்கும் மைதானத்தில் அதுவும் அவரது சிலைக்கு கீழே குண்டுகள் வெடித்துள்ளன. நரேந்திர மோடி பிரதமர் ஆவதை எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது. எப்பொழுது தேர்தல் நடந்தாலும் மோடிக்கு ஆதரவளிக்க மக்கள் தயாராக உள்னர்.

அதனால் காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கட்யினரும் சேர்ந்து தேர்தலை மத ரீதியில் கொண்டு செல்ல முயல்கிறார்கள். மத கலவரங்களுக்கு பாஜக தான் காரணம் என்று ராகுல் காந்தி பொறுப்பில்லாமல் பேசி வருகிறார்.

தேர்தலில் பாஜக வெற்றி பெற நாங்களோ, மோடியோ பிரச்சராம் செய்ய வேண்டியதில்லை. ராகுல் போகிற இடமெல்லாம் பேசுவதை பார்த்துவிட்டு இவர் கையில் நாடு சென்றால் வீணாகிவிடும் என்று மக்களே எங்களுக்கு வாக்களிப்பார்கள்.

எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் தேசவிரோத சக்திகள் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் பாஜக அதிலும் குறிப்பாக மோடி ஆட்சிக்கு வந்தால் தேச விரோத சக்திகள் நசுக்கப்படும். அதனால் வரும் தேர்தலில் காங்கிரஸை அகற்ற பாடுபடுவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+