நிபா வைரஸ்.. பீதி வேண்டாம்.. கோவை அரசு மருத்துவமனை வேண்டுகோள்!

நிபா வைரஸ் குறித்து பீதி வேண்டாம் என கோவை அரசு மருத்துவமனை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கேரளாவை ஆட்டிப்படைக்கும் நிஃபா வைரஸ்..வீடியோ

    கோவை: நிபா வைரஸ் நோய் குறித்து மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் தெரிவித்து உள்ளார்.

    கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டீன் அசோகன் மேலும் தெரிவித்ததாவது:

    நிபா வைரஸ் நோய் குறித்து மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். கேரள எல்லையோரம் கோவை மாவட்டம் அமைந்து உள்ளதால், கேரள பகுதியில் இருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை வரும் நோயாளிகளுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    people not to panic about nipha virus kovai govt hospital

    சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+