"குயில் 80 அற்புதம் 75".. சஷ்டியாப்தபூர்த்தியில் சத்யராஜுடன் பேரறிவாளன் குத்தாட்டம்.. வீடியோ
திருப்பத்தூர்: குயில்தாசன்- அற்புதம்மாள் தம்பதிக்கு 80ஆவது திருமண நாளையொட்டி நடந்த விழாவில் பேரறிவாளன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்த்தசாரதி ரோட்டில் அமைந்துள்ள தனியார் திருமண வளாகத்தில் குயில் 80 அற்புதம் 75 என்ற தலைப்பில் பேரறிவாளன் தன்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் ஒரே மேடையில் பிறந்தநாள் விழா கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் தாயும் தந்தையும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு கேக் வெட்டி ஊட்டிக் கொண்டனர். மேலும் அலங்காநல்லூர் சமர் பறை இசை குழுவினரின் இசை முழக்கம் நடைபெற்றது.

பேரறிவாளன்
அப்போது பேரறிவாளனும் திரைப்பட நடிகர் சத்யராஜும் மேடையில் நடனமாடிய நிகழ்ச்சி அனைவரையும் பரவசப்படுத்தியது. இதனை தொடர்ந்து குயில் 80 அற்புதம் 75 என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

30 ஆண்டுகள்
சுமார் 30 வருடங்களாக குடும்பத்தை பிரிந்திருந்த பேரறிவாளனின் ஒட்டுமொத்த ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டதாக இந்த விழா அமைந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் 7 தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.

பேரறிவாளன் விடுதலை
இந்த நிலையில் பேரறிவாளனை இந்த வழக்கிலிருந்து உச்சநீதிமன்றம் தங்களுக்கு இருக்கும் விதியை கொண்டு விடுதலை செய்தது. பரோலில் இருந்த பேரறிவாளன் புழல் சிறைக்கு சென்று செயல்முறைகளை முடித்துக் கொண்டு விடுதலையானார். பேரறிவாளன் தனது விடுதலைக்கு தனது தாயுடன் குரல் கொடுத்த நபர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வந்தார்.

திருமணம்
இந்த நிலையில் பேரறிவாளனுக்கு திருமணம் நடத்தி வைக்க பெற்றோர் ஆசைப்பட்டு வரும் நிலையில் அவருக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தனது பெற்றோருக்கு 80 ஆவது திருமணம் (சஷ்டியாப்தபூர்த்தி) நடத்தி வைத்து பேரறிவாளன் மகிழ்ச்சி அடைந்தார்.

ஆசி பெற்ற பிரபலங்கள்
இந்த நிகழ்ச்சியில் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தருமபுரி எம்பி செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு குயில்தாசன்- அற்புதம்மாள் தம்பதியிடம் ஆசி பெற்றனர். இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக அலங்காநல்லூர் சமர் பறை இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.












Click it and Unblock the Notifications