அடங்காத பீட்டா... ஜல்லிக்கட்டை தடுக்கக்கோரி தமிழக தலைமைச் செயலாளருக்கு 'உத்தரவு தொனியில்' கடிதம்

தமிழகத்தில் தடையை மீறி நடைபெறும் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை தடுக்கக்கோரி தமிழக அரசுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துபவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தடையை மீறி நடைபெறும் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை தடுக்கக்கோரி தமிழக அரசுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. உச்சநீதிமன்றம் விதித்த தடையை முறைப்படி நடைமுறை படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உடனடியாக தீர்ப்பு வழங்க மறுத்து விட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

 Peta writes to Tamilnadu government to stop Jallikattu

இந்நிலையில் இதனை தடுக்கக்கோரி தமிழக தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குனர் ஆகியோருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்துபவர்களை கைது செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டியை எந்த ஒரு வடிவத்திலும் அனுமதிக்க கூடாது. ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையை முறைப்படி அமல்படுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தடையை முழுமையாக அமலாவதை உறுதிசெய்க என்று கூறி உள்ளது.

பீட்டா அமைப்பு காவல்துறை இயக்குநர் பெயரில் ஓய்வு பெற்ற தமிழக முன்னாள் டிஜிபி அசோக்குமார் பெயர் இடம் பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+