ஓ.. இதுதான் கரண்ட்டா?... 100 ஆண்டு கால இருளர் வாழ்வின் இருளை விரட்டிய அமைச்சர் தங்கமணி!
82 இருளர் குடும்பங்களுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி: விஞ்ஞான வளர்ச்சி விண்ணை முட்டுகிறது என்று சொல்லிக் கொண்டாலும், இன்னும் கரண்ட்டே பார்க்காத பகுதிகள் நம் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறது. எத்தனையோ கட்சிகள் ஆட்சி மாறியும் பல மலை கிராமங்களில் இந்த அவலம் நீடித்து வருவது நூற்றாண்டு விந்தைதான். முதல்முறையாக புதிதாக கரண்ட்டை பார்த்த மக்களின் செய்திதான் இது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ளது கிராமம் பெட்டமுகிளாலம். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மொத்தமாக 82 வீடுகள்தான் இருக்கும். இந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கரண்ட் கிடையாது. இந்த பகுதி மக்கள் கரண்டையே பார்த்ததும் கிடையாது. இது வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமம் என்பதால் யானைகள் போன்ற வனவிலங்குகளும் நடமாடிக் கொண்டே இருக்கும்.

எனவே வனவிலங்குகள் அச்சத்திலிருந்தும், தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக படிக்க வைக்கவும் 24 மணி நேரமும் தடையில்லாமல் கரண்ட் வேண்டும் என்றும் நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வந்தனர். இருளர் மக்களின் இந்த கோரிக்கையை கால்நடைதுறை அமைச்சரும், அதே மாவட்டத்தை சேர்ந்தவருமான பாலகிருஷ்ணன், மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் சொல்ல, அமைச்சரோ அதற்கான ஏற்பாட்டினை செய்து, 10 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மின்இணைப்பை தர நடவடிக்கை மேற்கொண்டார்.
இதற்காக நேற்றுமுன்தினம் இருளர் பகுதியில் இதற்கான திட்டத்தினையும் துவக்கி வைத்தார். அதன்படி மின்சார இணைப்பிற்கான ஸ்விட்ச்சையும் அமைச்சரே தன் கையால் ஆன் செய்தார். அப்போது அங்கிருந்த விளக்குகள் பளிச்சிட்டன. 100 வருடங்கள் கழித்து மின்சாரத்தை கண்ட மக்கள் துள்ளி குதித்தனர். கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, விரைவில் அந்த பகுதிகளில் சாலைவசதி, குடிநீர் வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்றும் உறுதிமொழி அளித்ததுடன், பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் இருளர் மக்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications