ஓ.. இதுதான் கரண்ட்டா?... 100 ஆண்டு கால இருளர் வாழ்வின் இருளை விரட்டிய அமைச்சர் தங்கமணி!
82 இருளர் குடும்பங்களுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி: விஞ்ஞான வளர்ச்சி விண்ணை முட்டுகிறது என்று சொல்லிக் கொண்டாலும், இன்னும் கரண்ட்டே பார்க்காத பகுதிகள் நம் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறது. எத்தனையோ கட்சிகள் ஆட்சி மாறியும் பல மலை கிராமங்களில் இந்த அவலம் நீடித்து வருவது நூற்றாண்டு விந்தைதான். முதல்முறையாக புதிதாக கரண்ட்டை பார்த்த மக்களின் செய்திதான் இது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ளது கிராமம் பெட்டமுகிளாலம். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மொத்தமாக 82 வீடுகள்தான் இருக்கும். இந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கரண்ட் கிடையாது. இந்த பகுதி மக்கள் கரண்டையே பார்த்ததும் கிடையாது. இது வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமம் என்பதால் யானைகள் போன்ற வனவிலங்குகளும் நடமாடிக் கொண்டே இருக்கும்.

எனவே வனவிலங்குகள் அச்சத்திலிருந்தும், தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக படிக்க வைக்கவும் 24 மணி நேரமும் தடையில்லாமல் கரண்ட் வேண்டும் என்றும் நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வந்தனர். இருளர் மக்களின் இந்த கோரிக்கையை கால்நடைதுறை அமைச்சரும், அதே மாவட்டத்தை சேர்ந்தவருமான பாலகிருஷ்ணன், மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் சொல்ல, அமைச்சரோ அதற்கான ஏற்பாட்டினை செய்து, 10 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மின்இணைப்பை தர நடவடிக்கை மேற்கொண்டார்.
இதற்காக நேற்றுமுன்தினம் இருளர் பகுதியில் இதற்கான திட்டத்தினையும் துவக்கி வைத்தார். அதன்படி மின்சார இணைப்பிற்கான ஸ்விட்ச்சையும் அமைச்சரே தன் கையால் ஆன் செய்தார். அப்போது அங்கிருந்த விளக்குகள் பளிச்சிட்டன. 100 வருடங்கள் கழித்து மின்சாரத்தை கண்ட மக்கள் துள்ளி குதித்தனர். கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, விரைவில் அந்த பகுதிகளில் சாலைவசதி, குடிநீர் வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்றும் உறுதிமொழி அளித்ததுடன், பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் இருளர் மக்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications