கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோவில் அனுமதி.. நள்ளிரவு முதல் தொடர் சிகிச்சை
Recommended Video

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 11.55 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று காலை அவர் தேனாம்பேட்டையிலுள்ள அப்பல்லோவின் சிறப்பு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தொற்று நோய் சிகிச்சை
அங்கு தொற்றுநோய் பாதிப்பு தொடர்பாக பரிசோதனைகள் நடத்தப்பட்டு மீண்டும் கிரீம்ஸ் சாலை அப்பல்லோவிற்கு அவர் அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

அப்பல்லோ அறிக்கை
இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரனாயி விஜயன் வழக்கமாக செய்துகொள்ளும் சோதனைகள்தான் என்றும், நாளையே அவர் டிஸ்சார்ஜ் ஆக வாய்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஏன் நள்ளிரவில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார் என்பதற்கான விளக்கம் அப்பல்லோ சார்பில் அளிக்கப்படவில்லை.

ஆறுதல் கூறிய முதல்வர்
கேரளாவில், அரிசி திருடியதாக குற்றம்சாட்டி, பழங்குடியின இளைஞன் மது என்பவர் அடித்தே கொலை செய்யப்பட்டார். நாடு முழுக்க இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மது குடும்பத்தாரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய பினராயி விஜயன், கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

நள்ளிரவில் சிகிச்சைக்கு சேர்ப்பு
இதன்பிறகு, நள்ளிரவில், அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதே கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சிகிச்சை பெற்றார், என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications