சுறுசுறுப்பில் கல்வி துறை –பிளஸ் 1 வகுப்புகளை விரைவாக தொடங்க நடவடிக்கை
நெல்லை: எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவை கடந்த ஆண்டை போல் இல்லாமல் இந்தாண்டு சீக்கிரமாக வெளியிட தேர்வு துறை விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வுகள் முடிந்து தற்போது விடைத்தாள்கள் வேகமாக திருத்தப்பட்டு வருகின்றன. வரும் 19 ஆம் தேதிக்குள் இந்த பணியை முடிக்க தேர்வு துறை முழு வீ்ச்சில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. தமிழ்தாள் மட்டும் முடிந்துள்ளது. அனைத்து தேர்வுகளும் வரும் 9 ஆம் தேதிக்குள் முடிகிறது. இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு விடைத்தாளகளும் வெகு வேகமாக திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பு செல்லும் மாணவர்கள் நீண்ட நாள் கோடை விடுமுறையில் இருப்பர். அதனை இந்தாண்டு குறைத்து விரைவில் பள்ளியில் சேர்க்க சேர்க்கை நடத்தி அவர்களுக்கு வகுப்புகளை தொடங்க கல்வி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
வரும் ஜூன் மாதம் 16ம் தேதி பிளஸ் 1 வகுப்புகளை தொடங்க தேர்வு துறை முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை விட இந்தாண்டு முன்னதாகவே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மே 31ம் தேதி 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியிடப்பட்டு ஜூன் 24ம் தேதி பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு ஒரு வாரம் முன்னதாகவே வகுப்புகள் தொடங்கப்படும். மற்ற வகுப்புகளுக்கு கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 2 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
வெயில் காரணமாக தனியார் பள்ளிகள் சில ஜூன் மாதம் 4 ஆம் தேதி திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கோடை வெயில் காரணமாக ஜூன் 10 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications