நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் #Sridevi
நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்
சென்னை: ஸ்ரீதேவியின் மறைவு வருத்தம் தருகிறது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது மரணமடையும் கணவர் போனிகபூர் மற்றும் மகள் குஷிகபூர் உடனிருந்தனர்
குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் உள்பட இந்தியாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்தவுடன் திரையுலகில் இருந்து விலகியிருந்த ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்கு பின் இங்கிலிஷ் விங்கிலிஷ், புலி, மாம் போன்ற படங்களில் நடித்தார்.
4 வயது முதல் 54 வயது வரை 50 ஆண்டு காலமாக திரைப்படங்களில் நடித்து இந்திய திரை உலகில் முடிசூடா ராணியாக பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.
Saddened by the untimely demise of noted actor Sridevi. She was a veteran of the film industry, whose long career included diverse roles and memorable performances. My thoughts are with her family and admirers in this hour of grief. May her soul rest in peace: PM narendramodi
— Narendra Modi (@Narendermodi_PM) February 25, 2018
ஸ்ரீதேவியின் மரணம் திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் ட்விட்டரில் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஸ்ரீ தேவியின் மறைவு ஆழ்ந்த சோகத்தை கொடுக்கிறது. இந்திய சினிமா துறையின் ஜாம்பவானாக திகழ்ந்தவர். அவரது நடிப்புகள் பல நினைவில் நீங்காதவை, அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.