சசிகலா - வேலி, செங்கோட்டையன் - ஓணான்... சொல்கிறார் ராமதாஸ்
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது 2 விரலைக் காண்பித்தார் என செங்கோட்டையன் கூறியிருப்பதற்கு ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது 2 விரல்களை காண்பித்தார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதற்கு ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். சசிகலா வேலி என்றும் அதில் செங்கோட்டையன் ஒரு ஓணான் என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் கட்சிக் கூட்டம் ஒன்றில் சசிகலா தரப்பு அதிமுக அமைச்சரான செங்கோட்டையன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கண்ணாடி வழியாக அவரை பார்த்ததாக கூறினார்.
ஜெயலலிதா என்னைப் பார்த்து இரட்டை விரலைக் காட்டினார்: செங்கோட்டையன் - சசிகலா என்ற வேலிக்கு செங்கோட்டையன் என்ற ஓணான் சாட்சி!
— Dr S RAMADOSS (@drramadoss) February 28, 2017
அப்போது அவர் தன்னைப் பார்த்து இரண்டு விரல்களை காண்பித்ததாக கூறினார். இதனை பல்வேறு தரப்பினரும் மறுத்து வருகின்றனர். செங்கோட்டையன் பொய் சொல்கிறார். சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை பார்த்து வந்தார். வேறு யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று பொன்னையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையி இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் சசிகலா என்ற வேலிக்கு செங்கோட்டையன் என்ற ஓணான் சாட்சி என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications