செப்டம்பருக்குள் சென்னை சிசிடிவி வளையத்துக்குள் வருகிறது.. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்
சென்னை மாநகரம் செப்டம்பருக்குள் சிசிடிவி வளையத்துக்குள் வரும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் விவேக் நடித்த மூன்றாம் கண் என்ற குறும்படத்தை வெளியிட்டு பேசிய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் சென்னை மாநகரம் சிசிடிவி கேமிரா கண்காணிப்பு வளைத்துக்குள் வரும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொடர்ந்து பல இடங்களில் வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சதிலேயே இருந்து வருகின்றன. இப்படியான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதில் தொழில்நுட்ப வளர்ச்சி உதவி வருகிறது. பல குற்றவழக்குகளில் சிசிடிவி கேமிரா வீடியோதான் முக்கிய ஆதாரமாகவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும் உதவியாக உள்ளன. இதனால், பாதுகாப்பு கருதி பலரும் தங்களுடைய கடைகள், வீடுகளில் சிசிடிவி கேமிராவைப் பொருத்திவருகின்றன.

இந்நிலையில், சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான அவசியம் குறித்து நடிகர் விவேக் தயாரித்து நடித்த மூன்றாம் கண் என்ற விழிப்புணர்வு குறும்படம் மற்றும் இ-செலான் குறித்த 2 குறும்படங்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று சென்னையில் வெளியிட்டார். அதனை நடிகர் விவேக் பெற்றுக் கொண்டார்.
அதே போல, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது தொடர்பாக அபராதம் செலுத்தும் இ-செலான் குறித்த குறுந்தகடுகளை இந்தியாவின் முதல் பெண் மோட்டார் பைக் பந்தய வீரர் அலிஷா அப்துல்லா பெற்றுக் கொண்டார்.

மூன்றாம் கண் குறும்படத்தை வெளியிட்டுப் பேசிய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், "பொதுமக்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமிரா நிறுவும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் பொது இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரம் முழுவதும் வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் சிசிடிவி கேமிரா வளையத்துக்குள் கொண்டுவரப்படும். நடிகர் விவேக் பாணியில் நகைச்சுவையோடு சமூக சிந்தனையை தூண்டும் வகையில் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார்" என்று கூறினார்.
நிகழ்ச்சியில் நடிகர் விவேக் பேசுகையில்," இ-செலான் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு காவல் துறை உங்கள் நண்பன் என்று கூறுவதற்கு ஏற்ப பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றங்களை தடுக்க அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராவை பொருத்த வேண்டும்" என்று கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications