திருவண்ணாமலை காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது பரபரப்பு புகார்
திராவிட இயக்கத்தலைவர்களை கொச்சைப்படுத்துவதாக எச்.ராஜா மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
Recommended Video

திருவண்ணாமலை: திராவிட இயக்கத் தலைவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய கட்டுரையில், ஆண்டாளைப் பற்றி தவறான கருத்துகள் உள்ளதாக பிரச்னை எழுந்தது. இதற்கு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பிறகும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா அவரை கடுமையாக தாக்கி பேசினார்.
வைரமுத்து கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதை போலவே, எச்.ராஜா பேச்சுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வைரமுத்து மீது புகார்
இதனையடுத்து இந்து அமைப்புகளும், பிராமண அமைப்புகளும் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தமிழகத்தின் சில இடங்களில் வைரமுத்து மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். காவல்துறையில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறையாண்மைக்கு எதிரானது
இந்நிலையில் திருவண்ணாமலை நகரை சேர்ந்த வழக்கறிஞர் சீனுவாசன், எச்.ராஜா மீது திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில், எச்.ராஜாவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையிலும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மதக்கலவரம்
மேலும், மக்கள் பெரும் மதிப்பு வைத்திருக்கும் திராவிட இயக்க தலைவர்கள் பற்றி கொச்சைப்படுத்தும் வகையிலும், கண்டிக்கதக்க வகையிலும் பேசுகிறார். இவரின் பேச்சு நாட்டில் மதக்கலவரம் வருமோ என அச்சப்பட வைக்கிறது. அதனால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தயக்கம்
இந்த புகாரை வாங்குவதா வேண்டாமா என காவல்நிலையத்தில் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவின் பேரில், புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு அத்தாட்சியாக சி.எஸ்.ஆர் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications