திருவண்ணாமலை காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது பரபரப்பு புகார்
திராவிட இயக்கத்தலைவர்களை கொச்சைப்படுத்துவதாக எச்.ராஜா மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
Recommended Video

திருவண்ணாமலை: திராவிட இயக்கத் தலைவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய கட்டுரையில், ஆண்டாளைப் பற்றி தவறான கருத்துகள் உள்ளதாக பிரச்னை எழுந்தது. இதற்கு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பிறகும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா அவரை கடுமையாக தாக்கி பேசினார்.
வைரமுத்து கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதை போலவே, எச்.ராஜா பேச்சுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வைரமுத்து மீது புகார்
இதனையடுத்து இந்து அமைப்புகளும், பிராமண அமைப்புகளும் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தமிழகத்தின் சில இடங்களில் வைரமுத்து மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். காவல்துறையில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறையாண்மைக்கு எதிரானது
இந்நிலையில் திருவண்ணாமலை நகரை சேர்ந்த வழக்கறிஞர் சீனுவாசன், எச்.ராஜா மீது திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில், எச்.ராஜாவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையிலும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மதக்கலவரம்
மேலும், மக்கள் பெரும் மதிப்பு வைத்திருக்கும் திராவிட இயக்க தலைவர்கள் பற்றி கொச்சைப்படுத்தும் வகையிலும், கண்டிக்கதக்க வகையிலும் பேசுகிறார். இவரின் பேச்சு நாட்டில் மதக்கலவரம் வருமோ என அச்சப்பட வைக்கிறது. அதனால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தயக்கம்
இந்த புகாரை வாங்குவதா வேண்டாமா என காவல்நிலையத்தில் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவின் பேரில், புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு அத்தாட்சியாக சி.எஸ்.ஆர் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications