காவிரி மருத்துவமனை வளாகம் போர்க்களமானது.. போலீசார்-திமுக தொண்டர்கள் தள்ளுமுள்ளு
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை எதிரே தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டது.

கருணாநிதி உடல் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக காவிரி மருத்துவமனையை சுற்றிலும் தொண்டர்கள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் காவல்துறையை அமைத்திருந்த தடுப்புகளை தூக்கி வீசி மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய சில தொண்டர்கள் முற்பட்டனர்.
#WATCH: Outside visuals of Chennai's Kauvery hospital, where DMK Chief M Karunanidhi is admitted. Police lathi charge crowd gathered outside. #TamilNadu pic.twitter.com/3fkR0LFlb1
— ANI (@ANI) July 29, 2018
அப்போது போலீசார் மற்றும் தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் கருணாநிதி மனைவி ராஜாத்தி அம்மாள் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியே கிளம்பிச் செல்லும்போது அவர்களை செல்லவிடாது அளவிற்கு தொண்டர்கள் கூட்டம் கொண்டிருந்த போது இந்த தள்ளுமுள்ளு நடைபெற்றது. இதனால் மருத்துவமனை வளாகம் போர்க்களமாக காட்சியளிக்கிறது.













Click it and Unblock the Notifications