வைரமுத்துவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நயினார் நாகேந்திரன் உள்பட 6 பேர் மீது வழக்கு
வைரமுத்துவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக நயினார் நாகேந்திரன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Recommended Video
நெல்லை: கவிஞர் வைரமுத்துவை கொலை செய்யலாமா என்று வெறித்தனமாக பேசிய பாஜகவின் நயினார் நாகேந்திரன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த வைரமுத்துவை கண்டித்து பாளையங்கோட்டையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர், ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், இந்து தர்மத்தை பற்றி அவதூறாக பேசுபவர்களை கொலை செய்யவும் நாம் தயாராக இருக்க வேண்டும். வைரமுத்துவை கொலை செய்யலாமா.
வைரமுத்துவின் நாக்கை அறுத்து வாருங்கள். நான் ரூ. 10 லட்சம் தருகிறேன் என்று வெறித்தனமாக நயினார் நாகேந்திரன் பேசினார். இந்த பேச்சு குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விமலன், பாளையங்கோட்டை போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து நயினார் நாகேந்திரன், பாஜகவின் நெல்லை மாவட்ட செயலாளர் சுரேஷ், அய்யாவழி சிவச்சந்திரன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், ஆய்க்குடி குமார்பாலகன், திருவல்லிக்கேணி சொற்பொழிவாளர் கிருஷ்ணப்ரியா ஆகிய 6 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.