போர்க்களமானது சென்னை.. கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் மூக்கு உடைந்தது.. பல போலீசாருக்கு காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது நடத்திய தடியடியால் போர்க்களமானது சென்னை. இளைஞர்களின் கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மூக்கு உடைபட்டது.

மெரினாவில் இன்று காலை போலீசார் தடியடி நடத்தி இளைஞர்களை விரட்டியடித்தனர். தகவல் அறிந்ததும் மேலும் பல இளைஞர்கள் மெரினா நோக்கி வந்தனர். திருவல்லிகேணியில் அவர்களை போலீசார் வழிமறித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து தடியடி நடத்த ஆரம்பித்தனர் போலீசார். சில இளைஞர்கள் திரும்பி ஓடினர். சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மூக்கு உடைபட்டு ரத்தம் வடிந்தது. மொத்தம் 5 போலீசார் காயமடைந்தனர்.
இதனால் சென்னை போர்க்களமாகியுள்ளது.
Locals near Marina Beach attacks police with stones and glass bottles. Many suffers injury. #Shame pic.twitter.com/ZtJ9xZsbyR
— Pinky Rajpurohit (@Madrassan) January 23, 2017












Click it and Unblock the Notifications