ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது நடிகர் கருணாஸுக்கு போலீஸ் வார்னிங்
சிவகங்கை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நடிகர் கருணாஸுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என நடிகர் கருணாஸ்க்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தக்கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் விதித்த தடை இந்த ஆண்டும் நீடித்து வருகிறது. இதனால் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்டம் பணங்காலி பகுதியில் தடையை மீறி 100 காளைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என எம்எல்ஏவும் நடிகருமான கருணாஸ் அறிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் நடிகர் கருணாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தடையை மீறி ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடத்தக்கூடாது என போலீசார் நடிகர் கருணாஸுக்கு அறிவுறுத்தினர்.












Click it and Unblock the Notifications