7 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - சப் இன்ஸ்பெக்டர் கைது, சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு தொடர்பாக காவல்துறை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை காவலர் குடியிருப்பில் வசிக்கும் தலைமை காவலரின் 13 வயது மகள் நேற்று பள்ளியிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அங்கு வந்த மதுரை மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய காவல்துறை உதவி ஆய்வாளர் மகேந்திரன் என்பவர் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் மகேந்திரனை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை விசாரித்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததோடு பணியிடை நீக்கம் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications