போலீஸ் அராஜகம்.. மதுக்கடையை எதிர்த்து போராடிய பெண்ணின் கன்னத்தில் அறைந்த போலீஸ்!
திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி போராடிய பெண்களின் கன்னத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை எதிர்த்து போராடிய பெண்களின் மீது போலீசார் லத்தி சார்ஜ் நடத்தியதோடு கன்னத்தில் அறைந்து கொடுமையாக தாக்கியுள்ளனர். இந்த வெறித்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது
டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை முதலே அவர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடையை மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தும் கலையாததால் போலீசார் தடியடி நடத்தினர்.
இதில் ஒருவரின் மண்டை உடைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களின் கன்னத்தில் போலீஸ் ஒருவர் ஓங்கி அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வெறித்தனமாக தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. போலீசாரை எதிர்த்து பலரும் முழக்கமிட்டுள்ளனர்.