பாபர் மசூதி இடிப்பு தினம்.. நெல்லையில் போலீசார் உஷார் நிலை
இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.
Recommended Video

நெல்லை: இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.
நெல்லை ரயில் நிலையம், பஸ் நிலையம், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். சிசிடி கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் தண்டவளத்தில் சோதனை நடந்து வருகிறது.

நெல்லை சந்திப்பு போலீசார் அனைத்து ரயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். இது போல் தூத்துக்குடி ரயில் நிலையம், பேரூந்து நிலையம், வழிபாட்டு தலங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிரமாக சோதனை நடந்து வருகிறது. அனைத்து பயணிகள் மற்றும் பக்தர்கள் சோதனை செய்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது ஒரு பெண் வைத்திருந்த பையில் மெட்டல் டிடெக்டரில் பலத்த சத்தம் வந்ததால் பையை திறந்து பார்த்தனர்.
அதில் அவர் அரிவாள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவர் வீட்டு உபயோகத்திற்காக வாங்கி செல்வதாக தெரிவித்தார். இருப்பினும் போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பினர். இன்று மாலை வரை இந்த பாதுகாப்பு தொடர்ந்து நடக்கும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications