உடைந்து விழுந்த திருச்சி கொள்ளிடம் பழைய பாலம்: பொதுமக்கள் அருகே செல்ல வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை
உடைந்து விழுந்த திருச்சி கொள்ளிடம் பழைய பாலம் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Recommended Video

திருச்சி: உடைந்து விழுந்த திருச்சி கொள்ளிடம் பழைய பாலம் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தின் 18வது தூண் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில் நேற்று 20வது தூணும் இடிந்து விழுந்து பாலம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் -டோல்கேட் பகுதியை இணைக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றின் மீது ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது. 1928 முதல் இது பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த பாலத்தின் அருகிலேயே 77 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய நான்குவழிச்சாலை பாலம் கட்டப்பட்டு கடந்த 2016ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக இரும்பு பாலம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.
கடந்த சில நாட்களாக வெள்ளத்தின் வேகம் அதிகரித்துள்ளதால், இரும்பு பாலத்தின் தூணில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்தது.
இந்நிலையில் ஆர்ப்பரித்து செல்லும் நீரையும் இடிந்து விழுந்த பழைய இரும்பு பாலத்தையும் காண அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டு வருகின்றனர். நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் எந்த நேரத்திலும் பாலம் இடிந்து விழலாம் என்பதால் பொதுமக்கள் பாலத்தின் அருகே செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
அதே நேரத்தில் போலீசார் மற்றும் அரசின் அலட்சியமே பாலம் இடிந்து விழ காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு முறையாக பராமரித்திருந்தால் பாலம் நன்றாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications