தலையில் கொதிக்கும் நீரை எடுத்து ஊற்றிக் கொண்ட ஏட்டு.. காரணம் போதை!
கரூர்: போதையின் பாதை மனிதனின் சுயமரியாதை உள்பட அனைத்தையும் அழித்து விடும் என்பது நிஜம்தான். புத்தி அவர்களது கட்டுப்பாட்டிலேயே இருக்காது. அதை கரூரைச் சேர்ந்த போலீஸ் தலைமைக் காவலர் ஒருவர் நிரூபித்துள்ளார்.
கரூர் அருகே எல்.என்.எஸ் போஸ்ட் பகுதியில் உள்ள திருக்காம்புலியூர் பகுதியை சார்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் செல்வராஜ் (52). இவர் கரூர் டவுன் போலீஸில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கொதிக்கும் தண்ணீரை தனக்கு தானே ஊற்றி கொண்ட இவர் கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எதற்காக இவர் தனக்கு தானே கொதிக்கும் தண்ணிரை ஊற்றிகொண்டார் என மற்ற போலீஸார் கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் மலுப்பி வருகிறார்.
ஆனால் இவர் குடிக்கு அடிமையான போலீஸ்காரர் என்று தெரிய வந்துள்ளது. போதையில் இவ்வாறு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த போலீஸாரின் செயல் குறித்து கரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தி விசாரித்து வருகின்றனர்.
தனக்கு தானே கொதிக்கும் நீரை ஊற்றி கொண்ட போலீஸ்காரரின் இந்த சம்பவம் மற்ற போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications