தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை – சந்தீப் சக்சேனா அறிவிப்பு
திருச்சி: திருச்சியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் விதிமுறை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக வரும் அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், புகார் குறித்து விசாரணை நடத்தாமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகளின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரித்துள்ளதாகவும், வரும் 11 ஆம் தேதிக்கு மேல் ஸ்ரீரங்கம் தொகுதிக்குள் வெளியாட்களுக்கு அனுமதியில்லை என்றும் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
தேர்தல் விதிமீறல் குறித்து புகார் அளிக்க 1950 மற்றும் 044-2467777 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications