பொள்ளாச்சி பாலியல் வன்முறை குற்றவாளி - ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுமியைத் தேடும் பணியில் போலீஸ்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடைபெற்ற இரண்டு மாணவிகளின் பாலியல் வன்முறையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குற்றவாளி வீராசாமி ஏற்கனவே ஒரு சிறுமியை பலாத்காரம் செய்த விவரம் தெரியவந்துள்ளது.
பொள்ளாச்சி டி.இ.எல்.சி ஆதரவற்றோர் மாணவ- மாணவிகள் விடுதியில் இருந்து கடத்தப்பட்ட 10 மற்றும் 11 வயதான 2 மாணவிகள் கடந்த 11 ஆம் தேதி அன்று இரவு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக வீராசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விடுதி மாணவிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்த போது அடுக்கடுக்காக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த குற்றங்கள் மட்டும் அல்லாமல் பஸ் நிலையப் பகுதியில் பிச்சை எடுக்கும் தொழில் செய்யும் சிறு பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதையே இவர் பொழுதுபோக்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது பொள்ளாச்சி பெரிய பள்ளிவாசல் முன்பு ஒரு பெண் தனது 8 வயது மகளுடன் படுத்திருந்திருக்கின்றார்.
அப்போது அங்கு வந்த வீராசாமி அந்த சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைப்பார்த்த சிறுமியின் தாயார் சத்தம் போட்டு ஊரைக் கூட்டி உள்ளார்.
அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து வீராசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.இந்த சம்பவத்தின் போது வீராசாமியின் சட்டைப்பையில் இருந்த ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அது பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் ஒரு பயணியிடம் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்ததோடு விட்டு விட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் வீராசாமியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியும், அவளது தாயாரும் அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.
இந்த நிலையில் விடுதி மாணவிகள் பலாத்கார வழக்கில் வலுகூட்டுவதற்காக வீராசாமியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை போலீசார் தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
சிறுமியும், அவளது தாயும் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மூலம் வீராசாமியை அடையாளம் காட்டுவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications