பணப்பட்டுவாடா புகார்: அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சாவூர் தொகுதி தேர்தலும் மே 23-க்கு ஒத்திவைப்பு!
சென்னை: பணப்பட்டுவாடா புகார் எழுந்ததை அடுத்து தஞ்சாவூர் சட்டசபை தொகுதியிலும் மே23-ந் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே25-ந் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியைத் தொடர்ந்து தஞ்சாவூரிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மேலும் சில தொகுதிகளிலும் தேர்தல் ஒத்திவைக்கப்படக் கூடும் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் சட்டசபை தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டது குறித்து அதிக அளவில் புகார்கள் வந்துள்ளன.

தஞ்சாவூர் சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையை அடுத்து அத்தொகுதியில் தேர்தல் மே 16 ஆம் தேதிக்குப் பதில் மே 23ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே25 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.எ ரெங்கசாமி போட்டியிடுகிறார். திமுக வேட்பாளராக டாக்டர் அஞ்சுகம் பூபதி போட்டியிடுகிறார். சட்டசபை தேர்தலில் 6 முனை போட்டி இருப்பதாக கூறப்பட்டாலும் அதிமுக, திமுக இடையேதான் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதும் தொகுதிகளில் கரன்சி மழை பொழிவதாக ஏற்கனவே புகார் எழுந்தது.
எனினும் வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொகுதியில் நிறைவடைந்த நிலையில் நேற்று அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்குப்பதிவையும், இன்று தஞ்சாவூர் தொகுதிக்கான வாக்குப்பதிவையும் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications