தூத்துக்குடியில் 13 பேர் மரணத்திற்கு காரணமே தி.மு.க.தான்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
13 பேர் மரணத்திற்கு திமுகதான் காரணம் என பொன்.ராதா தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்: தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் பலியானதற்கு தி.மு.க.தான் காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் சட்டசபையில் ஆளும் கட்சியை தி.மு.க. கேள்வி கேட்காமல் வெறும் வெளிநடப்பு மட்டுமே செய்வதாகவும் சாடியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது-

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மீனவ சகோதரர்கள் போராட்டத்தினை திசை திருப்பக்கூடிய அளவிற்கு மக்கள் அதிகாரம் அமைப்பு செயல்பட்டது. இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகள் தமிழகத்தில் செயல்படுவதாக நான் பலமுறை குற்றம் சாட்டி வருகிறேன். இப்போது அது வெளிவந்துள்ளது. இந்த அமைப்பை தடை செய்வதோடு மட்டுமல்ல, வேரோடு அகற்ற வேண்டும்.
தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் பலியானதற்கு தி.மு.க.வும் காரணம். சட்டசபையில் ஆளும் கட்சியை தி.மு.க. கேள்வி கேட்காமல் வெளிநடப்பு மட்டுமே செய்கின்றனர். உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை என இதுவரை ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை. இதனால் இரு கட்சிகளுக்கும் மறைமுக கூட்டணி இருக்குமோ என சந்தேகமாக உள்ளது.
டெல்லியில் 16 வழிச்சாலை அமைக்கப்பட்டபோது எந்தவித எதிர்ப்பும் கிளம்பவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்புகள் பெருகி வருகின்றன. முன்னேற்றம் வரவேண்டுமானால் சிலவற்றை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அப்போது தான் தமிழகம் முன்னேறும். 8 வழி சாலை திட்டத்தால் நல்ல பலன் தமிழகத்துக்கு கிடைக்கும். இந்த சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள முதல்வரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அதைபற்றி முதல்வர்தான் விளக்கம் தர வேண்டும்.
உலகில் தலை சிறந்த நடிகராக திகழ்ந்த சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக, தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. நடிப்புத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர்கள், துணை நடிகர்களுக்கு சிவாஜி பெயரில் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications