10 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.300: புதுவை முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: ரேசன் கடைகளில் பொருட்களை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பத்து கிலோ இலவச அரிசிக்கு பதிலாக 300 ரூபாய் பணமாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழா புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ரங்கசாமி, 'இந்த மாதம் முதல் 10 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மாத மாதம் 300 ரூபாய் பணமாக கொடுக்கப்படும் என்றார்.

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியாங்களில் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறிய அவர் குடும்ப அட்டைதாரரின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரி அரசுக்கு மாதம் ரூ.9 கோடி செலவாகும் என்றும் ரங்கசாமி கூறினார். பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு வரும் மார்ச் மாதம் முதல் லேப்டாப் வழங்கப்படும்,' என்றும் ரங்கசாமி அறிவித்தார்.
எதிர்கட்சிகள் புகார்
இலவச அரிசி திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக எதிர்கட்சிகள் புகார் எழுப்பியதை அடுத்து இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரங்கசாமி அரசு ஆட்சிக்கு வந்த கடந்த 40 மாதங்களில் 8 மாதங்களுக்கு மட்டுமே அரிசி வழங்கியுள்ளது, அதுவும், பெரும்பாலும் தரமில்லாத அரிசியைத்தான் அரசு கொடுத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
அனைத்து அட்டைத்தாரர்களுக்கும் அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க வேண்டும். பணமாக வழங்குவதன் மூலம் முறைகேடுகள் குறையும். மேலும் பத்து கிலோ அரிசியை முழுமையாக மக்கள் தாங்களே வெளிகடைகளில் இந்த பணத்தைக் கொண்டு வாங்கிக் கொள்ளமுடியும். இதனால் நியாயவிலை கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் ஒழிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் இலவச அரிசிக்கு பணம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் முதல்வர் ரங்கசாமி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications