பொங்கல் பரிசு ரூ 1000 ரொக்கமும், பச்சரிசி, வெல்லம் உள்பட பரிசு பொருட்கள் எப்போது விநியோகம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ 1000 ரொக்கம் வரும் ஜனவரி 5-ஆம் தேதி முதல் கிடைக்கும் என தெரிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் மக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். அந்த பரிசில் பச்சரிசி, சர்க்கரை, 5 கிராம் ஏலக்காய், தலா 20 கிராம் முந்திரி- திராட்சை, கரும்பு துண்டு ஆகியன வழங்கப்படும்.

Pongal gift and Rs 1000 will be given to the ration card holders from January 5th

ஆனால் கடந்த ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ 1000 ரொக்கப் பணத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த பரிசு பொருட்களும் ரொக்கமும் இந்த ஆண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு அவை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி நீதிமன்றம் சென்றதை அடுத்து இந்த பொங்கல் பரிசு வழங்குவது தள்ளி போனது. இதனால் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 27-ஆம் தேதியும் நாளையும் நடந்து முடிந்து விடும்.

அதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் மேற்கண்ட பரிசுப் பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. குடும்ப அட்டைதாரர்களுக்கு இரு 500 ரூபாய் நோட்டுகளை வழங்க மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் நோட்டு கட்டுகள் தயார் நிலையில் உள்ளன.

அரசு உத்தரவு பிறப்பித்ததும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் வரும் 5-ஆம் தேதி முதல் இவற்றை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிகிறது. அனைத்தும் தயார் நிலையில் உள்ள அரசு அறிவித்ததும் பொருட்களை வழங்கிவிடுவோம் என ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+