சசிகலா புஷ்பா கணவர் மீதான தாக்குதல் இயற்கையானது.. சொல்கிறார் பொன்னையன் !
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிகழ்ந்தது இயற்கையான நிகழ்வு என பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது இயற்கையான நிகழ்வு என்றும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா கணவர் மீதான தாக்குதல் இயற்கையானது என்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து அ.தி.மு.க., பொதுச்செயாலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை, வானரகத்தில் நாளை நடக்க உள்ளது.

இதில், சசிகலாவை பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சொல்லி தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், சசிகலாவுக்கு கட்சியின் ஒருதரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலர் தேர்தலில் போட்டியிட சசிகலா புஷ்பாவுக்காக மனு வாங்க லிங்கேஸ்வரன் அதிமுக அலுவலகத்துக்கு வந்தார். அவரை அதிமுகவினர் கடுமையாக தாக்கினர்.
இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறுகையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிகழ்ந்தது இயற்கையான நிகழ்வு. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா கணவர் மீதான தாக்குதல் இயற்கையானது. உணர்வுகள் என்பது சிலநேரங்களில் பிரச்சனையை உருவாக்குகிறது. அதேநேரம் வன்முறையில் அதிமுகவுக்கு நம்பிக்கை இல்லை. சசிகலா புஷ்பா கணவரை தாக்கியது கட்சியினர் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications