400 பவுன் கோவில் நகைகளை திருடிக்கொண்டு ஓடிய பூசாரியும் மகனும் கைது
திருப்பூர்: திருப்பூர் அருகே கோவிலுக்கு சொந்தமான 400 சவரன் நகைகளை திருடிக்கொண்டு தலைமறைவாக ஓடிய பூசாரி மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மங்கலம் சாலையில் ராமசாமி கோவில் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக காணிக்கை மற்றும் அன்பளிப்பாக கிடைத்த சுமார் 400 சவரனுக்கும் மேலான நகைகள் பூசாரி ராமனிடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற ராமன் தலைமறைவாகிவிட்டார். அவர் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், கோவில் நகைகளை சோதனை செய்ததில் 372 சவரன் நகைகள் போலியானவை என கண்டறியப்பட்டது.
இதையடுத்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பூசாரி ராமன் மற்றும் அவரது மகன் பிரகாஷை கைது செய்து அவர்களிடம் இருந்த 280 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications