For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

9 பேரை பலிகொண்ட பொறையார் பணிமனையின் ஓய்வறை முழுவதுமாக இடிப்பு

9 பேரை பலிகொண்ட பொறையார் பணிமனையின் ஓய்வறையை முழுவதுமாக இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

பொறையார்: 9 பேரை பலிகொண்ட பொறையார் பணிமனையின் ஓய்வறையை முழுவதுமாக இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

நாகை அருகே பொறையாரில் போக்குவரத்து பணிமனையின் ஓய்வறை மேற்கூரை இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதில் பணி முடிந்து தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர், நடத்துனர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.

Poraiyar bus depot employees rest room demolishing work started

இந்நிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடத்துனர் வெங்கடேசன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொறையார் பணிமனையின் ஓய்வறையை முழுவதுமாக இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. 1943 ல் கட்டப்பட்ட பணிமனை ஓய்வறை முழுவதுமாக இடிக்கும் பணியில் 2 பொக்லைன் எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

English summary
Poraiyar bus depot employees rest room demolishing work started. The employees rest room collapsed early morning and killed 9 employees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X