For Daily Alerts
Just In
லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் சிபிஎம் கூட்டணி: பிருந்தா காரத்
ஒரு இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் அ.தி.மு.கவுடன் சேர்ந்து போட்டியிட்டோம். அதேபோல் மாநிலங்களவை தேர்தலிலும் அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவித்தோம்.
நாடாளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இடதுசாரிகள் அ.தி.மு.கவுடன் ஒன்றாகச் செயல்பட்டோம். வரக்கூடிய காலத்திலும் அந்தத் திசைவழியில் எங்கள் நிலைப்பாடு இருக்கும் என்றார்.
மேலும் அ.தி.மு.க. பல விஷயங்களில் சரியான முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக, நெய்வேலி என்.எல்.சி. பங்கு விற்பனையில் சரியான நிலையை எடுத்தது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலும் தமிழக மக்களின் உணவுப் பாதுகாப்புக்கு ஏற்ற சரியான நிலையை அ.தி.மு.க. எடுத்தது என்றார்.
Comments
English summary
Marxist communist party’s Senior leader Brinda Karat said, the Marxist Communist party will form alliance with AIADMK in the coming Parliament elections.