"பிரபா.. கொஞ்சம் நிக்கணும்.. இது கேப்டனின் மோதிரம்” விஜய பிரபாகரனுக்கு அணிவித்த பிரேமலதா விஜயகாந்த்
தருமபுரி: "இது கேப்டனின் மோதிரம்.. கேப்டன் வாரிசு விஜய பிரபாகரனுக்கு இதனை அணிவிக்கிறேன்.." எனக் கூறி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அணிந்திருந்த மோதிரத்தை விஜய பிரபாகருக்கு அணிவித்தார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா.
தருமபுரியில் நடைபெற்ற தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகர் கட்சியின் இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார்.

தேமுதிக-வின் பத்தொன்பதாவது ஆண்டு செயற்குழு குழு பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கட்சி சார்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில இளைஞரணி துணை செயலாளராக விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவின் துணை செயலாளராக இருந்த எல்.கே. சுதீஷ் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரபா.. நிக்கணும்
விஜய பிரபாகர் மேடை ஏறி தந்தை விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மரியாதையை செலுத்திவிட்டு சிறிது நேரத்தில் இறங்க முற்பட்டார் அப்போது "பிரபா.. பிரபா கொஞ்சம் நிக்கணும்" என தடுத்து நிறுத்தி பேசத் துவங்கினார் பிரேமலதா விஜயகாந்த்.
"இது கேப்டனுடைய மோதிரம். இந்த நாளில் தனது தந்தையின் மோதிரத்தை அணிய ஆசைப்பட்டார் விஜய பிரபாகர். கேப்டனின் மூத்த மகன் என்ற முறையிலே அட்சய திருதியை நாளில் கேப்டனின் வாரிசுக்கு அவரது மோதிரத்தை பரிசளிக்கிறேன்" எனப் பேசினார்.
விஜயகாந்த் மோதிரத்துடன் விஜய பிரபாகர்
இதையடுத்து, உணர்ச்சிப் பெருக்குடன் மோதிர விரலை தொண்டர்களிடம் காட்டினார் விஜய பிரபாகர். தொடர்ந்து, தனக்கு மோதிரத்தை அணிவித்த தனது தாய் பிரேமலதா காலில் விழுந்து ஆசி பெற்றார் விஜய பிரபாகர், அவர் கன்னத்தில் முத்தமிட்டு அன்பைப் பகிர்ந்தார் பிரேமலதா. தொடர்ந்து, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், பிரேமலதா காலில் விழுந்து ஆசி பெற்றார்.
மற்ற அணிகளுக்கான பதவிகள் நாளை மே தினத்தில் தலைமை செயலகத்தில் அறிவிக்கப்படும், கூட்டணி குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் சரியான முறையில் அறிவிக்கப்படும்.
மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலை சந்திப்போம். நானும், விஜயபிரபாகரும் அனைத்து தொகுதிகளுக்கும் செல்வோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜயகாந்த் சிலை திறக்க பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications