விஜயகாந்த் செய்ததை அதிமுக, திமுகவால் செய்ய முடியுமா?, சவால் விடுகிறேன்: பிரேமலதா
வேலூர்: ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என விஜயகாந்த் போன்று அதிமுக, திமுகவால் உறுதிமொழி எடுக்க முடியுமா என்று தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதிமொழி எடுத்துள்ளார். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
தேர்தல் குறித்து வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்துமே கருத்து திணிப்புகள் ஆகும். மே 19ம் தேதி கருத்துக்கணிப்புகள் எல்லாம் தவிடுபொடியாகிவிடும். எங்கள் கூட்டணி 130 முதல் 160 இடங்களில் வெற்றி பெறும்.
அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை. எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால் ஊழல், லஞ்சத்தை ஒழிப்போம். வேலையில்லாமல் அல்லாடும்இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம்.
ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம் என்று விஜயகாந்த் உறுதிமொழி எடுத்துள்ளார். அவரை போன்று திமுக, அதிமுகவால் உறுதிமொழி எடுக்க முடியுமா? இது நான் அவர்களுக்கு விடும் சவால் என்றார்.












Click it and Unblock the Notifications