கருணாநிதியை அப்பாவாகதான் நானும் கேப்டனும் பார்த்தோம்.. பிரேமலதா கண்ணீர் மல்க உருக்கம்!
கருணாநிதியை தானும் கேப்டனும் அப்பாவாகதான் பார்த்தோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கருணாநிதியை தானும் கேப்டனும் அப்பாவாகதான் பார்த்தோம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா மற்றும் மகனுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில் கருணாநிதியின் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுதபடி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

பிரேமலதா இரங்கல்
இதைத்தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக மகளிரணி தலைவரான பிரேமலதாவும் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

மறக்க முடியாது
அதில் விஜயகாந்துடன் அமர்ந்து அழுதபடியே உருக்கமாக பேசியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியை தானும் கேப்டனும் பார்த்தோம் என்றும், அவருடன் பழகிய நாட்களை மறக்க முடியாது என்றார்.

கண்ணீர்மல்க இரங்கல்
தங்களின் திருமணத்தை நடத்தி வைத்தவர் கருணாநிதி என்றும் பிரேமலதா நினைவு கூர்ந்தார். கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே பேரிழப்பு என்றும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதது வேதனை அளிக்கிறது என்றும் பிரேமலதா கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தார்.
|
மனைவி பேசும் போதும்
தான் இரங்கல் தெரிவித்தபோது குழந்தை போல கண்ணீர்விட்டு அழுத விஜயகாந்த் தனது மனைவி பேசியபோதும் கண்ணீர் விட்டு அழுதார்.












Click it and Unblock the Notifications