இன்று இரவு செய்தியாளர்களுடன் ராஜசேகரன், சிவசேனாபதி, ராஜேஷ், ஹிப்ஹாப் ஆதி சந்திப்பு
ஜல்லிக்கட்டு புரட்சிப் போராட்டம் தொடர்பாக இன்று இரவு ஜல்லிக்கட்டு முன்னோடிகள் ராஜசேகரன், கார்த்திகேய சேனாபதி உள்ளிட்டோரக் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர்,
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஒரு குழப்பமான சூழலை உருவாக்க சிலர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதையே ஹிப்ஹாப் தமிழா ஆதியும் எதிரொலித்துள்ளார். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், முன்னோடிகளுமான பி.ராஜசேகரன், கார்த்திகேய சேனாபதி, ராஜேஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், ஜல்லிக்கட்டு பாதுகாப்பாக நடக்க நிரந்தர சட்டம் கோரியும் நாடே பிரமித்து பயந்து போகும் அளவிலான ஒரு புரட்சியை, எழுச்சியை தமிழகம் கண்டது. கடந்த 7 நாட்களாக நடந்து வரும் எழுச்சி மிக்க போராட்டம் எப்போது முடியும் என்பதே தெரியவில்லை. அந்த அளவுக்கு முன்பை விட பல மடங்கு உறுதியுடன் போராட்டக் களத்தில் உள்ளனர் இளைஞர்கள், மாணவ, மாணவியர், பெண்கள்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பத்திலிருந்து குரல் கொடுத்து வரும் தமிழக ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் டாக்டர் பி.ராஜசேகரன், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆய்வுக் கழக நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சேனாபதி, திருச்சி வீர விளையாட்டுப் பேரவை செயலாளர் ராஜேஷ், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர்.+
சென்னை பத்திரிகையாளர் கிளப்பி இன்று இரவு 8 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. அப்போது அவர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய தொலைபேசி எண்ணும் (98409 04244) தரப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications