காலியாக கிடக்கும் அதிகாரிகள் பணியிடம்... உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் சிக்கல்
நெல்லை: நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் அதிகாரிகள் பணியிடம் காலியாக இருப்பதால் அங்கு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 36 பேரூராட்சிகள் உள்ளன. இதில் சங்கரன்கோவில், வடக்கு வள்ளியூர், மணிமுத்தாறு, குற்றாலம் ஆகியவை சிறப்பு நிலை பேரூராட்சிகளாகும். மற்றவை தேர்வு நிலை பேரூராட்சிகளாக உள்ளன.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் 19 பேரூராட்சிகள் உள்ளன. இதில் திருச்செந்தூர் சிறப்பு நிலை பேரூராட்சியாகும். மற்றவை தேர்வு நிலை பேரூராட்சிகள்.

காலியிடம்...
இதில் 55 பேரூராட்சிகளில் 10 பேரூராட்சிகள் நிர்வாக அதிகாரி பணியிடம் காலியாக இருந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் குற்றாலம், வடக்கு வள்ளியூர், மணிமுத்தாறு, சங்கர்நகர், ஆய்க்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், கானம், தென்திருப்போரை, பெருங்குளம் ஆகிய 10 பேரூராட்சிகளில் அதிகாரிகள் பணியிடம் காலியாக இருந்து வருகிறது. இதனால் இந்த பேரூராட்சிகளின் பொறுப்பு இதர அதிகாரிகளிடம் கூடுதலாக ஓப்படைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்...
தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலம் அக்டோபர் மாதம் 23ம் தேதி முடிவடைகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை பிரித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது.

நிர்வாக அதிகாரிகள்..
உள்ளாட்சி தேர்தலை அந்தந்த பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள்தான் நடத்த வேண்டும். அறிவிப்பு வெளியிடுதல், வாக்காளர் பட்டியல் வெளியிடு, வேட்பு மனு பெறுதல், பரீசிலனை, ஏற்று கொள்ளுதல் என அனைத்து பணிகளும் நிர்வாக அதிகாரிகள் செய்ய வேண்டும்.

சிக்கல்...
இந்நிலையில் நிர்வாக அதிகாரி பணியிடம் காலியாக இருந்து வருவதால் உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்த முடியும் என இதர அதிகாரிகள் கைபிசைத்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications