காலியாக கிடக்கும் அதிகாரிகள் பணியிடம்... உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் சிக்கல்
நெல்லை: நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் அதிகாரிகள் பணியிடம் காலியாக இருப்பதால் அங்கு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 36 பேரூராட்சிகள் உள்ளன. இதில் சங்கரன்கோவில், வடக்கு வள்ளியூர், மணிமுத்தாறு, குற்றாலம் ஆகியவை சிறப்பு நிலை பேரூராட்சிகளாகும். மற்றவை தேர்வு நிலை பேரூராட்சிகளாக உள்ளன.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் 19 பேரூராட்சிகள் உள்ளன. இதில் திருச்செந்தூர் சிறப்பு நிலை பேரூராட்சியாகும். மற்றவை தேர்வு நிலை பேரூராட்சிகள்.

காலியிடம்...
இதில் 55 பேரூராட்சிகளில் 10 பேரூராட்சிகள் நிர்வாக அதிகாரி பணியிடம் காலியாக இருந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் குற்றாலம், வடக்கு வள்ளியூர், மணிமுத்தாறு, சங்கர்நகர், ஆய்க்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், கானம், தென்திருப்போரை, பெருங்குளம் ஆகிய 10 பேரூராட்சிகளில் அதிகாரிகள் பணியிடம் காலியாக இருந்து வருகிறது. இதனால் இந்த பேரூராட்சிகளின் பொறுப்பு இதர அதிகாரிகளிடம் கூடுதலாக ஓப்படைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்...
தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலம் அக்டோபர் மாதம் 23ம் தேதி முடிவடைகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை பிரித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது.

நிர்வாக அதிகாரிகள்..
உள்ளாட்சி தேர்தலை அந்தந்த பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள்தான் நடத்த வேண்டும். அறிவிப்பு வெளியிடுதல், வாக்காளர் பட்டியல் வெளியிடு, வேட்பு மனு பெறுதல், பரீசிலனை, ஏற்று கொள்ளுதல் என அனைத்து பணிகளும் நிர்வாக அதிகாரிகள் செய்ய வேண்டும்.

சிக்கல்...
இந்நிலையில் நிர்வாக அதிகாரி பணியிடம் காலியாக இருந்து வருவதால் உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்த முடியும் என இதர அதிகாரிகள் கைபிசைத்து வருகின்றனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications