பாஜக கூட்டணியில் 5 இடம் கேட்டிருக்கிறோம்: சொல்வது புதிய நீதிக் கட்சி ஏசி சண்முகம்!
Subscribe to Oneindia Tamil

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி. சண்முகம், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக் கட்சி உள்ளது.
இதுவரை 2 முறை நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மத்திய சென்னை, ஆரணி, திருவண்ணாமலை, அரக்கோணம், வேலூர் ஆகிய 5 தொகுதிகள் கேட்டுள்ளோம்.
லோக்சபா தேர்தலில் படித்தவர்கள், வர்த்தகர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது. அவர் பிரதமராக வருவது உறுதி. அதன் பின்னர் இலங்கை தமிழர் பிரச்னை தீர்த்து வைக்கப்படும். பாரதிய ஜனதா கூட்டணியை வலுப்படுத்த கூட்டணி கட்சிகள் தொகுதிகளை விட்டுத்தர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications