சாராயக் கடைகள் மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் இலக்கு: புதுவை அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி: புதுச்சேரியில் சாராயக் கடை மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் இதெல்லாம் வெறும் வார்த்தைக்கு மட்டும்தான். ஏனேனில் புதுவை மாநிலத்தை பொறுத்த வரை மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என முதல்வர் ரெங்கசாமி தெளிவாக கூறிவிட்டார்.

இந்நிலையில், சாராயக் கடைகள் மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்தம் 98 சாராயக் கடைகள் உள்ளன. இதில் 16 கடைகளின் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 80 கடைகளுக்கு ஏலம் நடைபெறுகிறது. காரைக்கால் பிராந்தியத்தில் 27 சாராயக் கடைகள் உள்ளன. இதில் 19 கடைகளின் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 8 கடைகளுக்கு ஏலம் நடைபெறுகிறது.
அதேபோல் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 69 கள்ளுக்கடைகளில், 22 கடைகளின் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 47 கடைகள் ஏலம் நடைபெறுகிறது.
கடைகள் குத்தகை காலம் 3 ஆண்டுகளாகும். அதில் அதிகப்பட்சம் ஏலம் கேட்போருக்கு கள், சாராயக் கடைகள் ஒதுக்கப்படும். இதனிடையே சாராயக் கடைகள் மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், சாராய விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது புதுவை அரசு.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications