சுடச்சுட பஜ்ஜி, பக்கோடா, போண்டா போட்டு விற்று புதுச்சேரி முதல்வர் நூதன போராட்டம்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பஜ்ஜி, பக்கோடா விற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்
புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி பஜ்ஜி, பக்கோடா விற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பிரதமர் மோடி பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பக்கோடா விற்பவர் கூட நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்தார்.
பாஜக தலைவர் அமித்ஷாவும் பக்கோடா விற்பனை செய்வது தவறல்ல என்றார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரி முதல்வர் போராட்டம்
சமூக வலைதளங்களிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

பட்ஜெட்டில் திட்டம் இல்லை
மத்திய அரசின் பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் ஏதும் இல்லை என குற்றம்சாட்டிய முதல்வர் நாராயணசாமி இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதுச்சேரியில் நூதன போராட்டம்
இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். புதுச்சேரி காந்தி வீதி நேரு வீதி சந்திப்பில் இந்த நூதன போராட்டம் நடைபெற்றது.

வெங்காய பக்கோடா
மாநில காங்கிரஸ் தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெங்காய பக்கோடா செய்கிறார். இதனை படித்த பட்டதாரி இளைஞர்கள் வாங்கி விற்பனை செய்து வருவதாக போராட்டம் நடத்தினர்.

பஜ்ஜி விற்கும் முதல்வர்
இதேபோல் முதல்வர் நாராயணசாமி பஜ்ஜி மற்றும் போண்டா செய்து விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போண்டா, பஜ்ஜி, பக்கோடாக்களை அவர்களே சுவைத்தும் பார்த்தனர்.

வேடிக்கை பார்த்த கூட்டம்
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டிலும் போராட்டத்தை வேடிக்கை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.












Click it and Unblock the Notifications