இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 11 மீனவர்கள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கும் நிகழ்வு அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த 24 ஆம் தேதி புதுக்கோட்டையைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றது.
இவர்கள் அனைவரும் இலங்கையின் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த 11 மீனவர்களையும் விடுதலை செய்ய ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications