வேலுச்சாமியை தூக்கிய தேர்தல் ஆணையம்.. அடடா, இது விஷாலுக்கு கிடைத்த வெற்றியாச்சே!
ஆர்.கே.நக்ர் தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமியை மாற்றம் செய்ததன் மூலம் விஷால் தனது கோரிக்கையில் வெற்றி பெற்றுவிட்டதாகவே கருதப்படுகிறது.
Recommended Video

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்றியுள்ளதன் மூலம் விஷால் வேட்பு மனு நிராகரிப்பில் முறைகேடு நடந்தது உண்மைதானோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் வேட்புமனு தாக்கல் செய்த விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. விஷாலை முன்மொழிந்த தீபனும், சுமதியும் தங்களது கையெழுத்து இல்லை என்று பின்வாங்கியதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கூறினார்.
இதையடுத்து விஷால் சாலை மறியல் செய்து பின்னர் போலீஸாரின் அறிவுரையின்படி தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவரது மனு ஏற்கப்பட்டுவிட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு
இதையடுத்து சிறிது நேரத்தில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரி அறிவித்தார். இது பலருக்கும் குழப்பத்தை எழுப்பியது. எதன் அடிப்படையில் தேர்தல் அதிகாரி இத்தகைய இருவேறு முடிவுகளை எடுத்தார் என்ற கேள்விகளும் எழுந்தன.

தேர்தல் அதிகாரியை மாற்ற கோரிக்கை
இதையடுத்து தமிழக அரசுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியன தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கோரிக்கை விடுத்தன. தான் அலுவலகத்தில் இருந்த போது ஒரு முடிவை எடுத்துவிட்டு நான் இல்லாத நிலையில் ஒரு முடிவை எடுப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்டு தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்ற வேண்டும் என்று விஷாலும் கோரிக்கை விடுத்தார்.

ராஜேஷ் லக்கானி விசாரணை
இதையடுத்து விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விளக்கமளித்தார். இந்த அதிகாரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பே அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிரவீன் நாயர் நியமனம்
இந்த நிலையில் தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமி இன்று திடீரென மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றங்கள் என்ன உணர்த்துகின்றன என்று தெரியவில்லை. விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு விவகாரத்தில்தான் வேலுச்சாமி மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே விஷால் பிராடுத்தனம் செய்யவில்லை என்பதும் கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகிறது.

விஷால் வெற்றி
விஷால் மீது எந்த தவறும் இல்லை என்றால் அவருக்கு ஆர்.கே.நகரில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு வேளை விஷால் போர்ஜரி செய்தே ஆவணங்களை தாக்கல் செய்திருந்தாலும் கூட, இந்தத் தேர்தலில் ஏதோ ஒரு முறைகேடு நடந்துள்ளதால்தான் தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டிருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications