அன்னையர் தினம்- அம்மாவுக்கு கட்டிய கோவிலை திறக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்காக கட்டிய கோயிலை, அன்னையர் தினமான ஞாயிறன்று திறக்க உள்ளார்.
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்கு கட்டியுள்ள கோயிலை அன்னையர் தினமான ஞாயிறன்று திறக்க உள்ளார். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்ராயன் அந்த கோவிலை திறந்து வைக்க உள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சொந்தச் செலவில் ராகவேந்திரருக்கு கோயில் கட்டியுள்ளார். இந்தக் கோயில், சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ளது.
தற்போது அந்த கோயிலுக்கு எதிராக தனது அம்மா கண்மணிக்கு கோயில் ஒன்றையும் கட்டியுள்ளார்.
உலகிலேயே அம்மாவிற்காக கோவில் கட்டியுள்ள முதல் நடிகர் ராகவா லாரன்ஸ் சர்வதேச அன்னையர் தினத்தில் அதனை திறந்து வைத்துள்ளார்.

அம்மா கோவில்
அந்த கோயிலில், அவருடைய அம்மா கண்மணியின் 5 அடி உயர முழு உருவச் சிலையை வைத்துள்ளார். அந்தச் சிலை ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டது.

அன்னையர் தினம்
ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்காக கட்டிய கோயிலை, அன்னையர் தினமான நாளை திறக்க உள்ளார். ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் இந்த சிலையை காலை 8 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்த விழாவில் மேலும் சில முக்கிய திரை பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.

அன்னையும் தெய்வமும் ஒன்று
ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள அம்மா கோவிலில் 13 அடி உயரம் உள்ள காயத்திரி தேவியின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. கடவுளும், பெற்ற தாயும் ஒன்றுதான் என்று உலகுக்கு நிரூபிக்கும் கோவிலாக இது இருக்க வேண்டும் என்பதற்காக அந்த காயத்திரி தேவி சிலைக்கு கீழேயே தனது தாயின் சிலையையும் லாரன்ஸ் நிறுவி உள்ளார்.

ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
உள்ளத்திலும் இல்லத்திலும் வைத்து போற்றி பாதுகாக்க வேண்டிய தாயை தயவு செய்து அனாதை இல்லத்தில் விட்டு வேதனைப்படுத்த வேண்டாம், என்று மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அம்பத்தூரில் ஸ்ரீராகவேந்திரர் கோவிலும், அம்மா கோவிலும் ரசிகர்களையும், பக்தர்களையும் அதிகம் கவரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications