இரவில் கடும் குளிர்.. பகலெல்லாம் வாடைக் காற்று.. என்னாச்சு தமிழகம்.. எங்க போச்சு மழை?
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை பெய்யாமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இந்த நிலையில் தற்போது பனி கொட்டத் தொடங்கியிருப்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் தற்போது வட கிழக்குப் பருவ மழைக்காலம் என்றாலும் கூட மழை அவ்வளவாக இதுவரை பெய்யவில்லை. கன மழை சுத்தமாக இல்லை. பல பகுதிகளில் இரவில் கடுமையாக குளிருகிறது. பகலில் வாடைக்காற்று வீசுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையையும் அது ஏற்படுத்திய பாதிப்பையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஆனால் அதற்கு நேர் மாறாக நிலைமை இந்த ஆண்டு உள்ளது.

இதுவரை ஒரு கன மழை கூட பெய்யவில்லை. வட தமிழகத்தில் இதுவரை இயல்பான அளவில் கூட மழை பெய்யவில்லை. காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சற்று பெய்துள்ளது என்றாலும் கூட இதுவரை பற்றாக்குறை மழைதான் அங்கு பெய்துள்ளது.
இந்தநிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக இரவில் நன்றாக குளிர்கிறது. பனி கொட்டுகிறது. பகலிலோ பெரும்பாலும் வாடைக்காற்று வீசுகிறது. பகலில் மழை இல்லை.மாறாக லேசான வெயிலும், வாடைக்காற்றுமாக இந்த வட கிழக்குப் பருவ மழைக்காலம் போய்க் கொண்டுள்ளது.
இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் காலையில் பனிமூட்டம் வாகன ஓட்டுநர்களை சிரமத்துக்குள்ளாக்கி வருகிறது. நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலை, நாகர்கோவில் - பூதப்பாண்டி நெடுஞ்சாலை, கன்னியாகுமரி - நாகர்கோவில் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. காலை 9 மணி வரையிலும் பனி மூட்டம் நிலவியதால் சாலைகளில் பயணித்த வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
வழக்கமாக மார்கழியில்தான் பனி வரும், குளிர் நடுங்கும். ஆனால் தற்போது பனி மூட்டம் வந்து விட்டதாலும், பனி கொட்டுவதாலும் மிச்சமிருக்கும் மழையும் குறையும் என மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
2 நாட்களுக்கு மழை
இதற்கிடையே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழ்வு காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 21ம் தேதிக்குப் பிறகு இந்த மழை குறையும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications